கொரோனா வைரஸ் தொற்றாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து- நால்வர் காயம்!
Dec 04, 2020 208 views Posted By : YarlSri TV
கொரோனா வைரஸ் தொற்றாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து- நால்வர் காயம்!
வெலிக்கந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அசேலபுர பகுதியில், கொரோனா வைரஸ் தொற்றாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை, கொழும்பில் இருந்து புனானை கொரோனா சிகிச்சை நிலையம் நோக்கி சென்ற பேருந்து ஒன்றும், காத்தான்குடியில் இருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்த இரு பேருந்துகளின் சாரதிகள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பேருந்தில் பயணித்த 23 கொரோனா தொற்றாளர்களில் இருவருக்கு மாத்திரம் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனாலும், குறித்த கொரோனா தொற்றாளர்களும் புனானை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கந்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago