Skip to main content

ரொஷான் ரணசிங்கவிற்கு எதிரான வழக்கு சஜித் எழுப்பிய கேள்வி

Nov 30, 2023 35 views Posted By : YarlSri TV
Image

ரொஷான் ரணசிங்கவிற்கு எதிரான வழக்கு சஜித் எழுப்பிய கேள்வி 



நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் ஆற்றிய உரைகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.



நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.



சபையில் உறுப்பினர்கள் கூறும் கருத்துகள் குறித்து யாரும் வழக்குப் பதிவு செய்ய முடியாது என கூறிய சபநாயகர், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்குகளில் மாத்திரம் தீர்ப்பு வழங்க நீதிமன்றத்திற்கு இடமளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



சஜித்தின் கேள்வி





நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்காக நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகரிடம் வினாவியுள்ளார்.

 



அதன்போதே சபாநாயகர் மகிந்த யாப்பா, இவ்வாறான கருத்துக்களை கூறியிருந்தார்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை