Skip to main content

2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரந்த சோக சம்பவம்!

Aug 26, 2023 38 views Posted By : YarlSri TV
Image

2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரந்த சோக சம்பவம்! 

 நீர்த்தொட்டியில் வீழ்ந்து 2 வயது பெண் குழந்தை ஒன்று  பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் வவுனியா மாவட்டம் - நெளுக்குளம் பகுதியில் இடம் பெற்றுள்ளது.



மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,



நேற்றைய தினம் மாலை வீட்டு முற்றத்தில் குறித்த குழந்தை விளையாடி கொண்டிருந்த போது சிறிது நேரத்தில் குழந்தையை காணாமல் போன நிலையில் பெற்றோர் குழந்தையை தேடியுள்ளனர்.



இதன்போது குறித்த குழந்தை கிணற்றிற்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் வீழ்ந்துள்ளமை கண்டறியப்பட்டது. உடனடியாக குழந்தை மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.



இருப்பினும், குழந்தை முன்பே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.



இச் சம்பவத்தில் நெளுக்குளம் பகுதியை சேர்ந்த 2 வயதான லிங்கராயா திவிக்கா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.



சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை