யாழ் மாவட்டத்தில் இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு டெங்கு ஒழிப்பு வாரம்....!
Jun 08, 2020 346 views Posted By : YarlSri TV
யாழ் மாவட்டத்தில் இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு டெங்கு ஒழிப்பு வாரம்....!
யாழ் மாவட்டத்தில் இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றிலிருந்து எதிர்வரும் மூன்று நாட்கள் டெங்கு கட்டுப்பாட்டுவாரமாக சுகாதார திணைக்களத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.மாநகர சபை சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் இணைந்து யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள், வியாபார நிலையங்களில் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் முகமாக பிரதேச மட்டக் குழுவினுடைய செயற்பாடுகள் அதேபோன்று கிராமிய சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு சுகாதார குழுவினரால், வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யப்பட்டது.
கிராம மட்ட செயற்பாட்டு குழுவில் நுளம்பு ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகளை கிரமமாக மேற்கொள்ள வேண்டும் அதே நேரத்தில் அவ்வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளும்போதுஎதிர்நோக்குகி
வெற்றுகாணிகளில் அந்த காணிச் சொந்தக்காரர்கள் அந்தக் காணியை முறைப்படி பற்றைகளை வெட்டி அகற்றி அதற்குமேலாக அங்கு காணப்படுகின்ற கொள்கலன்கள் சிரட்டை பிளாஸ்டிக் கொள்கலன் போன்றவற்றை அகற்றுவது பிரதானமானதாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று வீடுகளிலும் நீர் வழிந்தோடும் பகுதிகளை அடிக்கடி துப்பரவு செய்ய வேண்டிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
தற்பொழுது கொவித்19க்கு இணையாக இந்த டெங்கு பரவலும் நாட்டில் அதிகரித்துக் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரதேச செயலர்கள் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சுகாதார வைத்தியஅதிகாரிகள் பொலீசார் இந்த பரிசோதனைகளை முன்னெடுத்தனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1440 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1440 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1440 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1441 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1441 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1441 Days ago