Skip to main content

திமுக அனுமதி கொடுத்தது: செயல்படுத்தியது எல்லாம் அதிமுகதான் கே.என்.நேரு பேட்டி!

Sep 17, 2020 233 views Posted By : YarlSri TV
Image

திமுக அனுமதி கொடுத்தது: செயல்படுத்தியது எல்லாம் அதிமுகதான் கே.என்.நேரு பேட்டி! 

சட்டமன்றத்தில் முதல்வரின் உரையை மட்டுமே ஒளிபரப்பு செய்கின்றனர், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விவாதங்கள் மற்றும் கருத்துகளை ஒளிபரப்ப செய்ய அரசே தடுக்கிறது என்று திமுக முதன்மைச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.என் நேரு குற்றம்சாட்டினார்.



தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் புனரமைக்கப்பட்ட தந்தை பெரியாரின் சிலைக்கு திமுக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.என்.நேரு, ’’தந்தை பெரியாரை தமிழக மக்கள் மனதில் ஏந்த வேண்டும், தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று வளமுடன் இருக்கிறார்கள் என்றால் அதற்கு பெரியார் தான் காரணம். எனவே அவரை நினைவில் கொள்ள வேண்டும்.



சட்டமன்றத்தில் முதல்வரின் உரையை மட்டுமே ஒளிபரப்பு செய்கின்றனர். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விவாதங்கள் மற்றும் கருத்துகளை ஒளிபரப்பு செய்ய அரசே தடுக்கிறது. எங்களது கருத்துகள் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.



திமுக ஜல்லிக்கட்டுக்கு எப்படி மத்திய அரசை நாடி அனுமதி வாங்கினார்களோ, அதே போல் நீட் விவகாரத்தில் இது எங்களுக்கு தேவை இல்லை என்று தமிழக அரசு மத்திய அரசை நாட வேண்டும்’’என்றவரிடம்,



’’சூர்யாவிற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்ற கேள்விக்கு, மத்தியில் ஆட்சி இருக்கிறார்கள் . அவர்கள் கையில் ஒட்டுமொத்த இந்தியாவும் இருப்பதால் வருமான வரித்துறை போன்ற துறைகள் அவர்கள் கையில் இருப்பதால், இதுபோன்ற திரைப்பட நடிகர்களை மிரட்டுகின்றார்கள்’’என்றார்.



வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி வருகிறார்களே என்ற கேள்விக்கு,



’’காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி அதற்கு மறுப்பு தெரிவித்தார். அப்படி ஏதும் நடைபெறவில்லை’’’என்றார்.



கிசான், நீட் விவகாரம் குறித்த கேள்விக்கு, ‘’தமிழக விவசாயத் துறை அமைச்சரே இது தொடர்பாக பல அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவரே கூறியுள்ளார். தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவின் ஆட்சி மாறி மாறி நடைபெற்று வந்தது. எல்லாவற்றையும் திமுகதான் கொண்டு வந்தது என்று சொல்வது முறையல்ல, திமுக ஆட்சியில் ஆய்வு செய்ய தான் அனுமதி கொடுத்தோம், செயல்படுத்த அல்ல. ஸ்டெர்லைட் ஆலைக்கு கையெழுத்து போட்டது அதிமுக தான்,ஜெயலலிதா தான்’’என்றார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை