Skip to main content

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர்கள்!

Dec 10, 2023 25 views Posted By : YarlSri TV
Image

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர்கள்! 

சென்னை டிச 10 : மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தங்கும் இடம் உணவு என அவதிப்பட்டு வரும் நிலையில் பாதிக்கப்பட்ட இடங்களில் தமிழ்நாடு அரசு பல்வேறு உதவிகளையும் மீட்பு பணிகளையும் செய்து வருகிறது.



இதன் ஒரு பகுதியாக இன்று சென்னை அரும்பாக்கம் பகுதியில் அமைச்சர் கே.என்.நேரு தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் விதைகள் அமைப்பின் சார்பாக அரும்பாக்கம் பகுதி மக்களுக்கு மழைக்கால நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.



கனமழையால் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றும் விதமாக 600 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்.



நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை