Skip to main content

அரசு ஆஸ்பத்திரிக்கு மலைச்சாலைகளில் எளிதாக செல்லும் வகையில் சிறிய ரக ஆம்புலன்ஸ் வழங்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

Jun 03, 2020 347 views Posted By : YarlSri TV
Image

அரசு ஆஸ்பத்திரிக்கு மலைச்சாலைகளில் எளிதாக செல்லும் வகையில் சிறிய ரக ஆம்புலன்ஸ் வழங்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை 

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் அரசு மருத்துவமனை உள்ளன. இங்கே அவசர சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் உள்ளது. தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மங்களம்கொம்பு, பெரும்பாறை, கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர், ஆடலூர், பன்றிமலை, கும்பரையூர், பூலத்தூர் உள்பட 60-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்கு இந்த 108 ஆம்புலன்ஸ் இயங்கி வருகிறது. மலைப் பகுதி சாலைகள் மிகவும் குறுகியதாக உள்ளன. இதனால் பெரிய 108 ஆம்புலன்சில் பிரசவம், அவசர சிகிச்சை நோயாளிகளை கொண்டு செல்ல முடியாத நிலையுள்ளது.

மேலும் கிராமசாலைகளும் மிகவும் குறுகியதாக உள்ளதால் இந்த ஆம்புலன்ஸ் சென்று வர மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே மலைப்பகுதி மக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து சிறிய 108 ஆம்புலன்ஸ் மலைப்பகுதிக்கு புதியதாக வழங்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை