தடுப்பூசியை பயன்படுத்துவதற்கான தேவை இல்லை – பிரேசில் ஜனாதிபதி!
Dec 21, 2020 228 views Posted By : YarlSri TV
தடுப்பூசியை பயன்படுத்துவதற்கான தேவை இல்லை – பிரேசில் ஜனாதிபதி!
கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கான தேவை இல்லை என பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் தடுப்பூசியை பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்ற போதும் இது நியாயமானதாக இல்லையென பிரேசில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் விரைவில் முடிவுக்கு வரும் நிலை காணப்படும் இந்நிலையில் தடுப்பூசிக்கான தேவை இல்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த சில நாட்களாக அதிக நோயாளிகள் பதிவாகும் வீதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் தொற்று பரவல் முடிவுக்கு வருவதற்கான அறிகுறியாகவே இது இருப்பதாக பிரேசில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தடுப்பூசியை கொள்வனவு செய்வதிலும், அதனை பயன்படுத்துவதிலும் உலக நாடுகள் வெளிப்படுத்தும் கூடுதல் ஆர்வம் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை பிரேசிலில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 லட்சத்து 13 ஆயிரத்து 155 ஆக அதிகரித்துள்ளது.
அந்நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 49 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்தோடு அங்கு இதுவரை ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 356 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago