Skip to main content

மியான்மர் நாட்டை சேர்ந்தவர்களுக்கு தற்காலிக அடைக்கலம்- அமெரிக்கா

Mar 13, 2021 164 views Posted By : YarlSri TV
Image

மியான்மர் நாட்டை சேர்ந்தவர்களுக்கு தற்காலிக அடைக்கலம்- அமெரிக்கா  

மியான்மர் நாட்டில் ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சியை கைப்பற்றியது. இந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட ஏராளமான தலைவர்களை கைது செய்து வீட்டுக்காவலில் வைத்துள்ளது.



கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக ராணுவம் குற்றம்சாட்டி ஆட்சியை கைப்பற்றி உள்ளது.



ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து அவர்கள் மீது ராணுவம் துப்பாக்கிசூடு உள்ளிட்ட தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரை துப்பாக்கி சூட்டில் 70-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.



ஆட்சியை கைப்பற்றிய மியான்மர் ராணுவத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதில் மியான்மர் ராணுவ தலைவர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. மேலும் நேற்று மியான்மர் ராணுவ தளபதியின் 2 குடும்ப உறுப்பினர்கள் மீது பொருளாதார தடையை விதித்துள்ளது.



இந்த நிலையில் ராணுவ ஆட்சி மற்றும் வன்முறை காரணமாக நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் மியான்மர் மக்களுக்கு தற்காலிகமாக அடைக்கலம் கொடுக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.



இது குறித்து அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை செயலாளர் மயோர்காஸ் கூறும்போது, ‘தற்காலிக பாதுகாக்கப்பட்ட நிலை என்ற முடிவின் கீழ் மியான்மர் நாட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்காலிகமாக அமெரிக்காவிலேயே தங்கி இருக்க முடியும்’ என்றார்.



மியான்மரில் ராணுவ ஆட்சியின் கீழ் செயல்பட விரும்பாத போலீஸ் அதிகாரிகள் சிலர் தங்களது குடும்பத்துடன் எல்லையில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளனர். இதற்கிடையே மியான்மரை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட போலீசார் தங்களது குடும்பத்துடன் இந்தியாவுக்கு வந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை