உணவிற்காக கையேந்த வேண்டிய நிலையில் இலங்கையின் சில குடும்பங்கள்- உலக உணவு திட்டம்!
Sep 21, 2022 102 views Posted By : YarlSri TV
உணவிற்காக கையேந்த வேண்டிய நிலையில் இலங்கையின் சில குடும்பங்கள்- உலக உணவு திட்டம்!
இலங்கையில் உணவுப்பாதுகாப்பின்மை மேலும் மோசமடைகின்றது; சில குடும்பங்கள் வேறு ஒருவரிடமிருந்து உணவை பெற்று வாழவேண்டிய நிலையில் உள்ளன என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உணவு பாதுகாப்பு நிலைமை இன்னமும் ஸ்திரமற்றதாகவே காணப்படுகின்றது என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் சனத்தொகையில் மூன்றில் ஒருவருக்கும் அதிகமானவர்கள் கடும் உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளனர் என்பது உலக உணவு திட்டம் ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொண்ட ஆய்வின் போது தெரியவந்துள்ளது.
இது ஜூன் மாதத்தை விட அதிகமாகும்.
இலங்கையின் சனத்தொகையில் 37 வீதமானவர்கள் கடும் உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளனர் என்பது உலக உணவு திட்டத்தின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
பத்தில் எட்டு குடும்பங்கள் உணவை கைவிடுதல் வேறு இடத்திலிருந்து உணவை பெற்று உண்ணுதல் ஒரு நாளைக்கு உண்ணும் உணவை குறைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
இலங்கையின் உணவு நெருக்கடி சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் சமமற்ற தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மோசமான நிலையில் உள்ளன அதேநேரத்தில் மலையகம் மற்றும் நகர்புறங்களில் கிராமங்களை விட நிலைமை மோசமாக உள்ளது என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago