திடீரென குத்துக்கரணம் அடித்தார் மின்சார சபை தலைவர்
Jun 12, 2022 159 views Posted By : YarlSri TV
திடீரென குத்துக்கரணம் அடித்தார் மின்சார சபை தலைவர்
மன்னிப்பு கோரினார் மின்சார சபை தலைவர்
மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி திட்டம் தொடர்பாக கோப் குழு விசாரணையில் தெரிவித்த கருத்துக்கு இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ மன்னிப்பு கோரியுள்ளார்.
கோப் விசாரணையில், இத்திட்டத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்குமாறு இந்தியப் பிரதமர் தமக்கு அழுத்தம் கொடுப்பதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தன்னிடம் அறிவித்ததாக இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ கடந்த வெள்ளிக்கிழமை கோப் குழு முன்னிலையில் தெரிவித்திருந்தார்.
முற்றிலும் தவறானது
எதிர்பாராத அழுத்தம் மற்றும் உணர்ச்சிகளின் காரணமாக, இந்திய பிரதமரால் வலியுறுத்தப்பட்டது என்ற வார்த்தையை வரம்பில்லாமல் வெளிப்படுத்த நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன், இது முற்றிலும் தவறானது" என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவின் அழுத்தம் மற்றும் அதானி நிறுவனம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் தலைவர் கோப் குழு முன்னிலையில் தெரிவித்த கருத்தினை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மறுத்திருந்தார்.
தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் தனது மறுப்பினை பதிவு செய்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1474 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1474 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1474 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1474 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1474 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1474 Days ago