மத ஊர்வலத்தில் கற்கள் வீசப்பட்டதால் ராஜஸ்தான் மாநிலத்தில் பதற்றம்- கரௌலி நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்
Apr 03, 2022 105 views Posted By : YarlSri TV
மத ஊர்வலத்தில் கற்கள் வீசப்பட்டதால் ராஜஸ்தான் மாநிலத்தில் பதற்றம்- கரௌலி நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்
ராஜஸ்தான் மாநில புத்தாண்டின் முதல் நாளான நேற்று நவ சம்வத்ஸர் விழா நடைபெற்றது. இதையொட்டி கரௌலி நகரில் மத ஊர்வலம் நடைபெற்றது.
அப்போது மோட்டார் சைக்கிள் பேரணியின் மீது அடையாளம் தெரியாத சிலர் கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் நான்கு காவல்துறை அதிகாரிகள் உட்பட 42 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து அந்த பகுதியில் கலவரம் வெடித்தது. பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றன.
சட்டம் ஒழுங்கை பராமரிக்க உடனடியாக அங்கு கூடுதல் போலீஸ் படை அனுப்பப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார். கரௌலி நகரம் முழுவதும் இணையதள சேவை முடக்கப்பட்டது.
இந்நிலையில் கரௌலியில் வெடித்த வன்முறை குறித்து ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, மாநில டிஜிபி எம்.எல். லாதருடன் ஆலோசனை நடத்தினார்.
அமைதியை நிலைநாட்டுமாறு மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையே சமூக விரோதிகளை அடையாளம் காண காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். அமைதி காக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago