யாழ் மாவட்டத்தில் தற்பொழுது கடல் உணவுகளின் விலை அதிகரித்து காணப்படுகின்றது மீன் வியாபாரிகளின் வியாபார நடவடிக்கைகள் பாதிப்பு ...!
Jun 02, 2020 331 views Posted By : YarlSri TV
யாழ் மாவட்டத்தில் தற்பொழுது கடல் உணவுகளின் விலை அதிகரித்து காணப்படுகின்றது மீன் வியாபாரிகளின் வியாபார நடவடிக்கைகள் பாதிப்பு ...!
யாழ் மாவட்டத்தில் மீனவர்கள் தற்போதைய அசாதாரண சூழ்நிலையின் காரணமாக ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவது குறைவடைந்துள்ளது இதனால்மீன்களின் வரத்து குறைவடைந்துள்ளது .
தற்பொழுது தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்று ஆரம்பித்ததன் காரணமாக மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது கடும் காற்றின் காரணமாக மீனவர்கள் தொழிலுக்கு செல்லாத நிலையில் காணப்படுகின்றது .சிறு மீன்பிடி தொழிலாளர்களே தற்போது கரை வலை வீசி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா தொற்றினை தடுக்கும் முகமாக நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக மக்களிடையே பணப்புழக்கம் குறைவடைந்து காணப்படுகின்றது இதன் காரணமாக மக்கள் அதிக விலை கொடுத்து மீன்களை வாங்கநாட்டமில்லாது காணப்படுகிறார்கள்
மீன் வியாபாரிகள் வியாபார நடவடிக்கையில் பெரிதும் பாதிக்கப் படுகின்றார்கள் அத்தோடு சந்தைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப சந்தை நடவடிக்கைகள் முன்னெடுக்கபப்படுவதால் மக்களின் வருகையும் சந்தைகளில் குறைவடைந்து காணப்படுகின்றது இதன் காரணமாக மீன் விற்பனை யானது பெரிதும் பாதிக்கப்படுவதாக மீன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்
யாழ் மாவட்டத்தின் குருநகர் மற்றும் மயிலிட்டி கடற்பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலை காணப்படுகின்றது. ஒரு கிலோ பெரியமீனின் விலை 500 தொடக்கம் 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது .
இறால் ஒரு கிலோ 1500 ரூபாயாகவும்கணவாய் 850 ரூபாய்க்கும் யாழ் மாவட்ட சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் தற்போது மீனுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago