கொரோனா தோன்றியதை கண்டறிய 2 ஆண்டுகள் ஆகிவிடும்- ரஷிய விஞ்ஞானி தகவல்
Jul 13, 2021 129 views Posted By : YarlSri TV
கொரோனா தோன்றியதை கண்டறிய 2 ஆண்டுகள் ஆகிவிடும்- ரஷிய விஞ்ஞானி தகவல்
கொரோனா வைரஸ் முதன்முதலில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள விலங்குகள் சந்தையில் இருந்து கொரோனா உருவாகி இருக்கலாம் என்றும், வுகானில் உள்ள வைரஸ் ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கியபோது கசிந்து பரவி இருக்கலாம் என்றும் பேசப்பட்டது.
இதுபற்றி விசாரணை நடத்த உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, கடந்த ஜனவரி மாதம் சீனாவுக்கு சென்றது. அவர்கள் விலங்குகள் சந்தையையும், வைரஸ் ஆய்வுக்கூடத்தையும் நேரில் பார்த்து ஆய்வு செய்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில், வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்கு கொரோனா பரவியதாக கூறப்பட்டு இருந்தது. வைரஸ் ஆய்வுக்கூடத்தில் இருந்து கசிய வாய்ப்பு இ்ல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த அறிக்கை திருப்தி அளிக்காததால், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கொரோனா தோன்றியது எப்படி என்று விசாரித்து அறிக்கை அளிக்குமாறு அமெரிக்க உளவுத்துறைக்கு உத்தரவிட்டார்.
இந்தநிலையில், ரஷிய அறிவியல் அகாடமி உறுப்பினரும், நோவோசிபிர்ஸ்க் மாகாண பல்கலைக்கழக ஆய்வுக்கூடத்தின் தலைவருமான செர்ஜி நேட்சோவ் கூறியதாவது:-
கொரோனா எப்படி தோன்றியது என்பதை துல்லியமாக கண்டறிய நிறைய ஆய்வு செய்ய வேண்டும். இது மிக அரிய இயற்கை நிகழ்வு. விலங்கிடம் இருந்து எப்படி மனிதர்களுக்கு பரவியது என்ற மர்மத்தை கண்டறிய பலநாட்டு நிபுணர்களும் பாடுபட்டு வருகிறார்கள்.
அமெரிக்காவிலும் விசாரணை நடந்து வருகிறது. எந்தெந்த விலங்குகளில் கொரோனா வைரஸ் வாழக்கூடும் என்று பார்த்து ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. எனவே, இதற்கு நாள் கணக்கில் இல்லாமல், மாதக்கணக்கில் ஆகும். ஒரு வருடமோ, 2 வருடமோ ஆகலாம் என்றார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago