வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் விவசாயிகளின் போராட்டமாக தெரியவில்லை- திலீபன்...
Oct 20, 2021 193 views Posted By : YarlSri TV
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் விவசாயிகளின் போராட்டமாக தெரியவில்லை- திலீபன்...
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் விவசாயிகளின் போராட்டமாக தெரியவில்லை. அது கூட்டமைப்பினரின் போராட்டமாக தான் தெரிகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தெரிவித்தார்
வவுனியாவில் நேற்று (19) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் விவசாயிகளின் போராட்டமாக தெரியவில்லை. அது கூட்டமைப்பினரின் போராட்டமாக தான் தெரிகின்றது. காரணம் நான் செல்கின்ற அல்லது பார்க்கின்ற இடங்களில் விவசாயிகள் இந்த போராட்டங்களில் கலந்து கொண்டதாக தெரியவில்லை. அவர்களது வட்டார உறுப்பினர்கள், மாவட்ட உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தான் அந்த போராட்டங்களில் பங்கேற்கின்றனர்.
சேதன பசளை தொடர்பாக சில முரண்பட்ட கருத்துக்கள் இருந்தாலும் அரசாங்கம் அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு முழு மூச்சாக நடவடிக்கை எடுத்துள்ளது. விரைவில் விவசாயிகளிற்கு சாதகமான பதில் வந்தடையும் என்றார்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1474 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1474 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1474 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1474 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1474 Days ago