கனடா செல்ல தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை தமிழர்களிடம் விசாரணை!
Jun 20, 2021 177 views Posted By : YarlSri TV
கனடா செல்ல தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை தமிழர்களிடம் விசாரணை!
இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் கனடா செல்ல தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை தமிழர்கள் மங்களுர்வில் வைத்து கைது செய்யப்பட்டனர். அவர்களில் நால்ரை மங்களூர் தனிப்படை காவல்துறையினர் வேதாளை கடற்கரைக்கு அழைத்து வந்து இன்று விசாரணை செய்தனர். மேலும் தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை தமிழர்களுக்கு தங்க அடைக்கலம் கொடுத்த முக்கிய குற்றவாளி தலைமறைவானதால் அவர் குறித்தும் மங்களூர் தனிப்படை காவல்துறையினர் மரைக்காயர்பட்டிணத்தில் தீவிர விசாரணை நடத்தி சென்றனர்.
இலங்கை புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த 34 இலங்கை தமிழர்கள் சட்டவிரோதமாக கள்ளதோணியில் கனடா செல்வதற்காக கடந்த மாதம் 27ந் தேதி புத்தளம் கடற்கரையில் இருந்து புறப்பட்டனர். அவர்கள் மறுநாள் அதிகாலை ராமநாதபுரம் மாட்டம் ராமேஸ்வரம் அடுத்த வேதாளை கடற்கரையை வந்து சேர்ந்தனர். பின்னர் வேதாளையில் இருந்து மங்களூர் சென்று கடல் வழியாக கனடா நாட்டிற்கு தப்பி செல்ல முயன்ற போது கடந்த 11ந்தேதி மங்களூர் காவல்துறையினரால் 34 இலங்கை தமிழர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 34 இலங்கை தமிழர்களில் நான்கு பேரை மட்டும் காவல்துறை காவலில் எடுத்த மங்களூர் காவல்துறையினர் அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்களை திரட்டுவதற்காக விசராணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்ட 4 இலங்கை தமிழர்களை ராமேஸ்வரம் அடுத்துள்ள வேதளை கடற்கரைக்கு அழைத்து வந்த மங்களூரை சேர்ந்த ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், காவலர்கள் என 7 பேர் கொண்ட தனிப்படை இலங்கையிலிருந்து எப்படி கடற்கரையில் வந்து இறங்கினார்கள், அங்கிருந்து எப்படி மரைக்காயர்பட்டிணத்தில் உள்ள வீட்டில் தங்கி இருந்தனர் என்பது குறித்து அவர்களை வைத்து ஒத்திகை நடத்தி அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
மேலும் சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை தமிழர்களை அடைக்கலம் கொடுத்து தங்க உதவிய முக்கிய குற்றவாளியான இம்ரான் கான் தலைமறைவாகியுள்ளதால் மரைக்காயர்பட்டிணத்தில் உள்ள அவரது வீட்டிற்கு தனிப்படை காவல்துறையினர் சென்றனர் அப்போது வீடு பூட்டி இருந்ததால் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர்.
விசாரணையில் இம்ரான் கான் ஒரு வாரத்திற்கு மேலாக மரைக்காயர்பட்டிணத்தில் இல்லை என்பது தெரியவந்ததையடுத்து அடுத்த கட்ட விசாரணை செய்வதற்காக தற்போது கைது செய்யப்பட்டு மங்களூரில் இருந்து அழைத்து வரப்பட்ட 4 இலங்கைத் தமிழர்களை கடற்கரை வழியாக எங்கெல்லாம் அவர்கள் சென்றார்கள் யாரெல்லாம் சந்தித்தார்கள் என் ராமநாதபுரம் கியூ பிரிவு காவல்துறையினரின் உதவியுடன் மங்களூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
7 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
7 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago