Skip to main content

இலங்கை யாழில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233ஆக உயர்வு!

Aug 29, 2021 146 views Posted By : YarlSri TV
Image

இலங்கை யாழில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233ஆக உயர்வு! 

பருத்தித்துறை, மந்திகை ஆதார வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த 22 வயது இளம் பெண் உள்ளிட்ட இருவருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



பருத்தித்துறை சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவர் மூன்று நாட்களாக காய்ச்சலுடன் சுகயீனமாக இருந்த நிலையில் இன்று காலை மூச்சு எடுப்பத்தில் சிரமாக இருந்துள்ளார். 



அதனால் இளம் பெண்ணை மந்திகை மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவுக்கு அனுமதித்த போது மருத்துவ பரிசோதனையில் அவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இளம் பெண்ணின் மாதிரிகளில் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுத்த போது, கொவிட்-19 நோய்த்தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.



வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவர் மந்திகை மருத்துவமனைக்கு நோய்க்காவு வண்டியில் அழைத்துவரப்பட்டு வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்தார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் கொவிட்-19 தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233ஆக உயர்வடைந்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை