மீண்டும் நான் ஆட்சியில் அமருவேன்: குமாரசாமி!
Jul 28, 2021 149 views Posted By : YarlSri TV
மீண்டும் நான் ஆட்சியில் அமருவேன்: குமாரசாமி!
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது
எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார். அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது கொரோனாவால் இறந்த பி.பி.எல். குடும்பங்களை சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு இதுவரை அரசாணை பிறப்பிக்கவில்லை. எடியூரப்பா பதவி விலகியதால் எங்கள் கட்சிக்கு லாபமா? என்பது குறித்து பேச விரும்பவில்லை.
வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவி செய்ய அரசு இல்லை. இது கஷ்டத்தில் உள்ள மக்களுக்கு மேலும் அடி விழுவது போல் உள்ளது. நான் 2 முறையும் அதிர்ஷ்டத்தால் தான் முதல்-மந்திரி ஆனேன். நான் நல்ல பணிகளை மேற்கொண்டேன். சாமுண்டீஸ்வரி ஆசி இருக்கும் வரை நான் மக்கள் பணியாற்றுவேன். மீண்டும் நான் ஆட்சியில் அமருவேன்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago