ஆங் சான் சூகி எதிர்வரும் நாட்களில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்! – மியன்மார் இராணுவ தளபதி
May 23, 2021 212 views Posted By : YarlSri TV
ஆங் சான் சூகி எதிர்வரும் நாட்களில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்! – மியன்மார் இராணுவ தளபதி
மியன்மார் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற ஆங் சான் சூகி சிறந்த உடல்நலத்துடன் உள்ளதாக அந்த நாட்டு இராணுவ தலைவர் மின் ஆங் ஹ்லேங் தெரிவித்துள்ளார்.
அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் முதன்முறையாக நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்ட பின்னர் அவர் பொது வெளியில் தோன்றியிருக்கவில்லை.
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஆங் சான் சூகி தற்போது தமது வீட்டில் தடுப்புக்காவலில் உள்ளார்.
இந்தநிலையில் எதிர்வரும் சில நாட்களில் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என மியன்மார் இராணுவ தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாக அவர் மீண்டும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கடந்த பெப்ரவரி முதலாம் திகதி முதல் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டதாகவும் மியன்மார் இராணுவ தலைவர் மின் ஆங் ஹ்லேங் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago