சசிகலா நிரபராதி; அவர் மீது சந்தேகமில்லை ஓபிஎஸ் திடீர் பல்டி!
Mar 23, 2021 172 views Posted By : YarlSri TV
சசிகலா நிரபராதி; அவர் மீது சந்தேகமில்லை ஓபிஎஸ் திடீர் பல்டி!
ஜெ. மறைவுக்கு சசிகலா மீது சிலர் சந்தேகம் எழுப்பினார்கள்; அந்த சந்தேகத்தை போக்கவே, நீதி விசாரனை கேட்டேன் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மறைந்தார். அப்போது, முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் -சசிகலா இடையே பதவி சண்டை வெடிக்கவே, முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அவர்., 2017 பிப்ரவரி 7-ஆம் தேதி திடீரென்று ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று மவுன விரதம் இருந்தார். பின்னர் நான் தர்மயுத்தம் மேற்கொண்டுள்ளேன். சசிகலாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனவே மரணத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார். இதனால் ஓபிஎஸ் – ஈபிஎஸ் என அணி பிரிந்தது, சசிகலா ஜெயிலுக்கு போனதும் இருவரும் அன்னான் தம்பியாக மாறி சசிகலாவை ஓரம்கட்டியது எல்லாம் தமிழக மக்கள் அறிந்த ஒன்று தான்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் சசிகலா மீது உங்களுக்கு இன்னும் வருத்தங்கள் உண்டா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், எனக்கு அவர் மீது எந்த வருத்தமும் இல்லை. இப்போது இல்லை எப்பவுமே இருந்தது இல்லை. ஜெயலலிதா மறைவுக்கு பின்னல் சில சந்தேகங்கள் அவர் மீது இருந்தது. அம்மா சமாதியில் நான் அளித்த பேட்டியை பார்த்தால் உங்களுக்கு தெரியும். சில சூழல்களில் அம்மா மரணத்தில் அவருக்கு கெட்ட பெயர் வரக்கூடிய சூழல் இருக்கிறது. அதற்காக ஒரு நீதி விசாரணை வைத்து அவர் நிரபராதி என்று நிரூபித்தால் அவருடைய கெட்டபெயர் விடுபடும் என்பதை தான் நான் சொல்லிருக்கிறேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவரிடம் சசிகலா மீது உங்களுக்கு சந்தேகம் இருந்தது இல்லையா? என்ற கேள்விக்கு, எனக்கு அவர் மீது எந்த சந்தேகமும் இருந்ததில்லை. நான் அவருடனும், அம்மாவுடனும் பயணித்திருக்கிறேன். 30 ஆண்டுகள் அம்மாவுடன் அவர் இருந்திருக்கிறார்கள். அவர் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை” என்றார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago