அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற மீண்டும் அனுமதி: பைடன் கையெழுத்து!
Jan 27, 2021 200 views Posted By : YarlSri TV
அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற மீண்டும் அனுமதி: பைடன் கையெழுத்து!
அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற மீண்டும் அனுமதியளிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
2016ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா, மூன்றாம் பாலினத்தவர்கள் இராணுவத்தில் சேர வழிவகை செய்தார்.
ஒபாமாவின் இந்த உத்தரவை பின்னர் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் நீக்கினார்.
தற்போது மீண்டும் ட்ரம்ப் விதித்த தடையை நீக்கி, அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
இதன்படி, அமெரிக்க ராணுவத்தில் ஏற்கனவே பணிபுரியும் மூன்றாம் பாலினத்தவர்கள் தொடர்ந்து பணி புரியலாம் ஆனால் இராணுவத்தில் புதிதாக மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்வதற்கு தடைவிதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஜோ பைடன் கூறுகையில், ‘அமெரிக்க இராணுவத்தில் சேவை செய்யத் தகுதியுள்ள அனைவரும் இராணுவத்தில் சேரலாம்.
தகுதியுள்ள அனைவரும் வெளிப்படையாகவும் பெருமையுடனும் சேவை செய்யும்போது அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கும், அதனால் மூன்றாம் பாலினத்தவர்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது’ என கூறினார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1485 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1485 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1485 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago