2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்குவதற்கான வர்த்தமானியை வெளியிட்டது தமிழக அரசு!
Dec 21, 2020 217 views Posted By : YarlSri TV
2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்குவதற்கான வர்த்தமானியை வெளியிட்டது தமிழக அரசு!
அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்குவதற்கான வர்த்தமானி அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.
தமிழகத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய தொகுப்புடன் பொங்கல் பரிசு 2500 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்க வர்த்தமானி அறிவிப்பை தமிழக அரசு இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளது.
2.10 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. அரிசி அட்டைகளாக மாற்றம் செய்யக்கூடிய 3,75,235 சர்க்கரை அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும்.
இதுவரை பொங்கல் பரிசாக 1000 ரூபாய் அளிக்கப்பட்டு வந்த நிலையில் இந்தாண்டு 2500 ரூபாய் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago