தொழிலாளர்களின் கஞ்சித் தொட்டி போராட்டம் திருச்சியில் பரபரப்பு!
Sep 15, 2020 246 views Posted By : YarlSri TV
தொழிலாளர்களின் கஞ்சித் தொட்டி போராட்டம் திருச்சியில் பரபரப்பு!
திருச்சி செம்பட்டு பகுதியில் சேலத்தார் தோல் தொழிற்சாலை இயங்கி வந்தது. இதில், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இந்த தோல் தொழிற்சாலை மூடப்பட்டது. ஆனால் இந்த தொழிற்சாலையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய தொழிலாளர்கள் 55 பேருக்கு வழங்க வேண்டிய பண பலன்களை தொழிற்சாலை நிர்வாகம் வழங்க மறுத்துவிட்டது.
ஊழியர்கள் பலமுறை நிர்வாகத்திடம் கேட்டும் எந்த பலனும் இல்லாத காரணத்தினால், திருச்சி சுந்தர் நகர் பகுதியில் உள்ள தொழிற்சாலை உரிமையாளர் வீட்டு வாயில் முன்பாக சி.ஐ.டி.யூ சார்ந்த திருச்சி மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம் நடத்தினர்.
தொழிலாளர்களின் கஞ்சித்தொட்டி போராட்டத்தினால் திருச்சியில் பரபரப்பு நிலவுகிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago