Skip to main content

நாட்டில் புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் முழு விபரம்!

Dec 07, 2020 189 views Posted By : YarlSri TV
Image

நாட்டில் புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் முழு விபரம்! 

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) காலை 5 மணியுடன் சில பொலிஸ் பிரிவுகளும் கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.



இதேவேளை, கொழும்பில் இன்று காலை 5 மணி முதல் மூன்று கிராம சேவகர் பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளும் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.



அதன் முழுமையான விபரம்..



கொழும்பு மாவட்டம்



01. இன்று காலை 05.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்ட பிரதேசங்கள்



• புளுமெண்டல் பொலிஸ் பிரிவு

• வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் விஜய புர கிராம உத்தியோகத்தர் பிரிவு



02. தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்படும் பிரதேசங்கள்



• முகத்துவாரம் (மோதர) பொலிஸ் பிரிவு

• கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு

• கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவு

• ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் பிரிவு

• டேம் வீதி பொலிஸ் பிரிவு

• வாழைத் தோட்டம் பொலிஸ் பிரிவு

• மாளிகாவத்தை பொலிஸ் பிரிவு

• தெமட்டகொடை பொலிஸ் பிரிவு

• மருதானை பொலிஸ் பிரிவு

• கொம்பனி வீதி பொலிஸ் பிரிவில் வேகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவு

• பொரள்ளை பொலிஸ் பிரிவில் வனாத்தமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு

• வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவில் சாலமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் லக்சந்த செவன குடியிருப்பு

• மட்டக்குளிய பொலிஸ் பிரிவில் ரந்திய உயன குடியிருப்பு மற்றும் பெர்கஸன் வீதி தெற்கு பிரிவு



03. இன்று காலை 05.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தும் பிரதேசங்களாக பெயரிடப்படும் பகுதிகள்



• கொம்பனி வீதி பொலிஸ் பிரிவில் ஹுணுப்பிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவு

• கறுவாத்தோட்ட (குறுந்துவத்தை) பொலிஸ் பிரிவில் 60ஆவது தோட்டம்

• வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் கோகிலா வீதி



கம்பஹா மாவட்டம்



01. இன்று காலை 05.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படும் பிரதேசங்கள்



• வத்தளை பொலிஸ் பிரிவில் பின்வரும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தவிர்ந்தவை

• பேலியகொடை பொலிஸ் பிரிவு பின்வரும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தவிர்ந்தவை

• களனி பொலிஸ் பிரிவு



02. இன்று காலை 05.00 மணி தொடக்கம் புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக பெயரிடும் பிரதேசங்கள்



வத்தளை பொலிஸ் பிரிவு




  • கெரவலப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு

  • ஹேக்கித்த கிராம உத்தியோகத்தர் பிரிவு

  • குருந்துஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு (முரசரனெராநயெ)

  • எவரிவத்தை (நுஎயசi றயவவய) கிராம உத்தியோகத்தர் பிரிவு

  • வெலிகடமுல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு



பேலியகொடை பொலிஸ் பிரிவு




  • பேலியகொடைவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு

  • பேலியகொடை கங்கபட கிராம உத்தியோகத்தர் பிரிவு

  • மீகாவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு

  • பட்டிய – வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு



கிரிபத்கொடை பொலிஸ் பிரிவு




  • வெலேகொடை வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு



நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இது வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக இருக்குமென்று கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் அறிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை