440 உடல்கள் புதைக்கப்பட்ட புதைகுழி கண்டுபிடிப்பு!
Sep 16, 2022 64 views Posted By : YarlSri TV
440 உடல்கள் புதைக்கப்பட்ட புதைகுழி கண்டுபிடிப்பு!
சில நாட்களுக்கு முன்பு ரஷ்யப் படைகளிடமிருந்து மீட்கப்பட்ட வடகிழக்கு நகரமான இசியத்தில் 440 உடல்கள் அடங்கிய வெகுஜன புதைகுழியை உக்ரைனிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதில் ஷெல் மற்றும் வான்வழித் தாக்குதல்களால் கொல்லப்பட்ட சிலரின் உடல்களும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வார இறுதியில் ஆயிரக்கணக்கான ரஷ்ய துருப்புக்கள் இசியம் நகரத்தை விட்டு பின்வாங்கினர். நகரத்தை ஆக்கிரமித்து கார்கிவ் பிராந்தியத்தில் ஒரு தளவாட மையமாக பயன்படுத்திய பின்னர் அங்கிருந்து வெளியேறிய போது அவர்கள் ஏராளமான வெடிமருந்துகளையும் உபகரணங்களையும் விட்டுச் சென்றனர்.
இந்த நிலையில்இ இசியத்தில் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் புலனாய்வாளர்கள் அந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்ட வெடிபொருட்கள் ஏதேனும் உள்ளதா என ஆய்வு செய்தனர். இதன்போதே இந்த புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.
ரஷ்யா எல்லா இடங்களிலும் படுகொலைகளை விட்டுச் செல்கின்றது அதற்கு ரஷ்யா பொறுப்பேற்றே ஆக வேண்டும் என கூறிய உக்ரைன் ஜனாதிபதி கிய்வின் புறநகரில் உள்ள புச்சாவில் நடந்த படுகொலைகளை நினைவுக்கூர்ந்தார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் 'ஐசியத்திற்கு வெளியே ஒரு காட்டில் மரங்களுக்கு மத்தியில் எளிய மர சிலுவைகளுடன் கூடிய நூற்றுக்கணக்கான கல்லறைகள் இருந்தன. அவற்றில் பெரும்பாலானவை எண்களால் மட்டுமே குறிக்கப்பட்டன. ஒரு பெரிய கல்லறையில் 17 உக்ரைனிய வீரர்களின் உடல்கள் இருந்ததாகக் குறிக்கும் அடையாளமாக இருந்தது' என தெரிவிக்கப்பட்டுள்ளது
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago