Skip to main content

ரஷியாவில் போலீசார் சோதனையின் போது பயங்கரவாதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார். இதில் அந்த பயங்கராவாதி மட்டும் உயிரிழந்தான்!

Dec 12, 2020 278 views Posted By : YarlSri TV
Image

ரஷியாவில் போலீசார் சோதனையின் போது பயங்கரவாதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார். இதில் அந்த பயங்கராவாதி மட்டும் உயிரிழந்தான்! 

ரஷியாவின் வடக்கு கசசஸ் மாகாணத்தின் கரச்யா-சர்கிஸ்யா நகரில் உள்ள உச்ஹிஹன் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதி பதுங்கி இருப்பதாக ரஷிய பயங்கரவாத தடுப்பு பிரிவு பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



இதையடுத்து, அந்த கிராமத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் உச்ஹிஹன் கிராமத்தில் உள்ள அந்த வீட்டை சுற்றிவளைத்தனர். 



பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்ததை உணர்ந்த அந்த பயங்கரவாதி பாதுகாப்பு படையினரிடம் சிக்கிவிடுவோமோ என்ற அச்சத்தால் தனது உடலில் வெடிகுண்டுகளை அந்த பயங்கரவாதி கட்டிக்கொண்டு தற்கொலைப்படை தாக்குதலுக்கு தயாரானான்.



பாதுகாப்பு படையினர் வீட்டின் உள்ளே நுழைந்த உடன் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை பயங்கரவாதி வெடிக்கச்செய்தான். அந்த தற்கொலைப்படை தாக்குதலில் வெடிகுண்டை கட்டியிருந்த பயங்கரவாதி உடல்சிதறி உயிரிழந்தான். 



ஆனால், பாதுகாப்பு படையினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை விட்டு சற்று விலகி இருந்ததால் அதிஷ்டவசமாக பாதுகாப்பு படையில் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனாலும், பயங்கரவாதியின் இந்த தற்கொலைப்படை தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 6 பேர் காயமடைந்தனர்.



தற்கொலைப்படை தாக்குதல் நடந்த பகுதி 1990 ஆம் ஆண்டு சிசன்யா மாகாண பிரிவினைவாதிகளுக்கும், ரஷிய படையினருக்கும் இடையே நடந்த மோதல் பகுதிக்கு அருகில் உள்ள மாகாணம் ஆகும். இதையடுத்து, இந்த தற்கொலைப்படை தாக்குதல் குறித்து ரஷிய பாதுகாப்பு படையினர் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

3 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

3 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

3 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

3 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

3 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

6 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை