Skip to main content

பெற்றோர் திட்டியதால் மாயமாகிய பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவரை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்!

Oct 07, 2020 244 views Posted By : YarlSri TV
Image

பெற்றோர் திட்டியதால் மாயமாகிய பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவரை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்! 

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவர், கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் வீட்டில் இருந்தபடியே இருவரும் படித்து வந்துள்ளனர்.



இந்த நிலையில், வீட்டு வேலைகளை செய்யவில்லை என பெற்றோர் திட்டியதால், மனமடைந்த மாணவிகள் இருவரும் திடீரென வீட்டை விட்டு வெளியேறி மாயமாகியுள்ளனர்.



அதிர்ச்சியடைந்த பெற்றோர் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் பெரும்பாலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர்.



போலீசார் மாணவிகளை தீவிரமாக தேடியபோது, அவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டத்தில் உறவினர் வீடு ஒன்றில் ரகசியமாக தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



பின்னர் மாணவிகளை அழைத்து வந்த போலீசார் அவர்களுக்கு போதிய ஆலோசனை அளித்து அவரவர் பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை