முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- பசவராஜ் பொம்மை!
Dec 05, 2020 248 views Posted By : YarlSri TV
முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- பசவராஜ் பொம்மை!
கர்நாடகத்தில் முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பசவராஜ் பொம்மை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தட்சிண கன்னடா- மங்களூர்,பனம்பூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் பசவராஜ் பொம்மை மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த 10 மாதங்களாக மாநிலத்தில் குற்றச் சம்பவங்கள் ஓரளவு குறைந்திருந்தாலும், சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக சைபர் கிரைம் மூலம் வங்கி மோசடி சம்பந்தமான முறைப்பாடுகள் அதிக அளவில் கிடைக்கப்பெற்றுள்ளன.
எனவே, மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மக்கள் ஏமாற கூடாது. போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மாநகரில் குற்றச் சம்பவங்களை தடுக்க புதியதாக 1,200 இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை பொலிஸ் ஊடாக கண்காணிக்கப்படும்.
மாநிலத்தில் பொலிஸாருக்கு தேவையான வசதிகளை மாநில அரசு உடனுக்குடன் செய்து கொடுத்து வருகிறது. பொலிஸார் 24 மணி நேரமும் பணியில் இருப்பதால் அவர்களுக்கு தேவையான வீடு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மாநில அரசு செய்து வருகிறது.
இதேவேளை மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 5ஆம் திகதி, மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு கன்னட கூட்டமைப்பு சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
ஆனாலும் போராட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. போராட்டத்தை நடத்துபவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
1 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
1 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
1 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
1 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
1 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago