சாதி மறுப்பு திருமணம் செய்பவருக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை!
Mar 25, 2021 189 views Posted By : YarlSri TV
சாதி மறுப்பு திருமணம் செய்பவருக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை!
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விசிகவுக்கு தேர்தல் ஆணையம் பானை சின்னம் ஒதுக்கியுள்ள நிலையில் தீவிர பரப்புரையில் திருமாவளவன் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில் இன்று விசிக தேர்தல் அறிக்கையை விழுப்புரத்தில் வெளியிட்டார் திருமாவளவன். அதில் உள்ள சிறப்பு அம்சங்களை காணலாம்.
*தமிழ் நாட்டில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீடு முறை பாதுகாக்கப்படும்.
*கல்வித்துறையை பொதுப பட்டியலில் இருந்து விடுவித்து மாநில அதிகாரிகளுக்கான பட்டியலில் இணைக்க வேண்டும்
*தமிழ் வழி மழலையர் வகுப்புகளை கட்டாயமாக்க வேண்டும்
*மருத்துவம் ,பொறியியல் ,சட்டம், உயர்கல்வி படிப்புகள் தமிழ் வழியில் வழங்கப்படும்
*மாநில அரசின் கடன் சுமைகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வலியுறுத்தல்
*தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையை நிலைநாட்டும் வகையில் சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும்
*ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை செய்ய வலியுறுத்தல்
*புதிய வேளாண் திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவது தடுக்க போராட்டம் தொடரும்
*வேளாண்மையை மேம்படுத்த தனி வரவுசெலவுத்திட்டம்
*100 நாள் வேலை வாய்ப்பை வேளாண்மைக்கும், சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்திற்கும் நீட்டிப்பு செய்து 200 நாளாக உயர்த்தவும்
*அனைத்து வகுப்புகளிலும் மாணவர்களுக்கு விவசாய பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்
*மின் உற்பத்தி திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, தமிழகத்தை மின் உபரி மாநிலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
*இடஒதுக்கீடு முறை பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிடச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
*சாதி மறுப்பு திருமணம் புரிந்தோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை; தம்பதியனரைப் பாதுகாக்க தனி காவல் பிரிவு உருவாக்க வலியுறுத்துவோம்.
*தமிழ்ப் பெயரில்லாத திரைப்படங்களுக்கு இரட்டிப்பு வரி விதிக்க நடவடிக்கை எடுப்போம்.
*திருநங்கையருக்கு கல்வி – வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
*பட்டியலின இடஒதுக்கீட்டை 2011 மக்கள்தொகை அடிப்படையில் 21% ஆக உயர்த்த வலியுறுத்தப்படும்
*பெண்களுக்கு 33 விழுக்காடு அமல்படுத்தவும் பின்னர் அதை 50 விழுக்காடாக உயர்த்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
*மீனவ மக்கள் மீன் பிடி தொழிலின் போது இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
1 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
1 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
1 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
1 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
1 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago