Skip to main content

நந்திக் கடலில் காணாமல் போயிருந்த மீனவர் சடலமாகக் கண்டெடுப்பு!

Dec 05, 2020 236 views Posted By : YarlSri TV
Image

நந்திக் கடலில் காணாமல் போயிருந்த மீனவர் சடலமாகக் கண்டெடுப்பு! 

நந்திக் கடலில் காணாமல் போயிருந்த மீனவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.



வங்காள விரிகுடாவில் உருவாகிய புரெவி புயல் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கடுமையான காற்றுடன் கூடிய மழை பொழிந்த நிலையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது.



இந்நிலையில், மழை மற்றும் காற்று காரணமாக நந்திக் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த வள்ளம் ஒன்று நந்திக்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.



இந்நிலையில் நேற்றுக் காலை குறித்த வள்ளத்தை கரைக்குக் கொண்டுவருவதற்காக தனது சகோதரனுடன் பிறிதொரு வள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வள்ளத்தில் ஏறியபோது நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த மீனவரே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.



கேப்பாப்பிலவு மாதிரிக் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளிள் தந்தையான 26 வயதுடைய ஜெயசீலன் சிலக்சன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



குறித்த மீனவரைத் தேடும் பணியில் கடற்படையினர், இராணுவத்தினர் மற்றும் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை