தனியார் மருத்துவமனை நர்ஸ் கழிவறையில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
Oct 04, 2020 291 views Posted By : YarlSri TV
தனியார் மருத்துவமனை நர்ஸ் கழிவறையில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தனியார் மருத்துவமனை கழிவறையில், நர்ஸ் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்தியூரை அடுத்த, பர்கூர் அரசு மருத்துவமனை மருத்துவர் பார்த்திபன், தவிட்டுபாளையம் பகுதியில் தனியாக கிளினிக் நடத்தி வருகிறார். அங்கு நீலகிரி மாவட்டம் காமராஜபுரம் தேவபேட்டா பகுதியை சேர்ந்த விஜயகுமாரி என்பவர் கடந்த ஆண்டில் இருந்து செவிலியராக வேலை செய்து வருகிறார்.
கிளினிக்கின் பின்புறம் உள்ள அறையில் தங்கியுள்ள விஜயகுமாரி, காலையில் குளிப்பதற்காக கழிவறையில் வாட்டர் ஹீட்டர் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக விஜயகுமாரி மின்சாரம் தாக்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
விஜயகுமாரி நீண்ட நேரமாகியும் வராத நிலையில், மருத்துவர் பார்த்திபன் அவருக்கு போன் செய்து பார்த்துள்ளார். போன் எடுக்கவில்லை என்பதால், மருத்துவர் உள்ளே வந்து பார்த்த போது கழிவறையில் விஜயகுமாரி இறந்து கிடந்துள்ளார்.
இதனையடுத்து மருத்துவர் பார்த்திபன் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த போலீசார்,செவிலியர் விஜயகுமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குளிக்க சுடுநீர் வைத்த போது வாட்டர் ஹீட்டர் கருவியால் மின்சாரம் தாக்கி நர்ஸ் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1471 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1471 Days ago