வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் பூசகர் கைது!
Mar 08, 2024 18 views Posted By : YarlSri TV
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் பூசகர் கைது!
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் மகா சிவராத்திரி பூசை ஏற்பாடுகளுக்கு சென்ற பூசகர் சிவத்திரு மதிமுக ராசாவை கைது செய்தமை மிகப் பாரதூரமான சைவத்தமிழர்களின் அடிப்படை வழிபாட்டுரிமையை மீறும் செயல் என அகில இலங்கை சைவ மகாசபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது .
இன்று சிவராத்திரி விழா அனுட்டிக்கப்படும் நிலையில் ,அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவிலுக்கு சென்ற பூசகர் பொலிசார் கைது செய்தனர் .
இது தொடர்பில் அகில இலங்கை சைவ மகா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்,,
உலகம் பூராகவும் உள்ள சைவர்களின் மிக உன்னதமான முதன்மையான விரதம் சிவராத்திரி ஆகும்.
அந்த வகையில் வன்னி சிவப் பிராந்தியத்தில் வவுனியா மாவட்டத்தில் உள்ள தொன்று தொட்டு தமிழ்ச் சைவர்கள் வழிபட்டு வரும் ஆதி சிவன் கோவிலின் மகா சிவராத்திரி வழிபாடுகளுக்கு சென்ற பூசகர் மிக மோசமான முறையில் கைது செய்யப்பட்டமையையும் பக்தர்களின் வழிபாடுகளிற்கு ஆலய பரிபாலன சபையினரின் பூசை ஏற்பாடுகளுக்கு பலத்த இடையூறு விளைவிக்கப்பட்டு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டமை சைவசமயிகளிற்கு வலியை ஏற்படுத்தி உள்ளது.
இது இலங்கையின் சைவசமயிகளின் வழிபாட்டு உரிமைக்கு விடுவக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தலும் அதே நேரம் சைவ சமய மதகுருவை மோசமாக நடாத்தி கைது செய்தமை மன்னிக்க முடியாத செயலாகும் .
உடனடியாக பூசகர் சிவத்திரு மதிமுகராசாவை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துவதுடன் நீதிமன்ற உத்தரவுகளை யும் மீறி தன்னிச்சையாக செயற்பட்ட நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிசார் மீது அரசு உரிய ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் .
அதேநேரம் இன்றைய மகா சிவராத்திரி வழிபாடுகளிற்கு எந்தவித இடையூறுகளையும் மேற்கொள்ளாமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
மிகுந்த இன்னல்களை தொடர்ச்சியாக சந்தித்து எமது பூர்வீக வழிபாட்டு உரிமையை விட்டுக்கொடுக்காத அதற்க்காக இத்துணை தியாகங்களை செய்து வரும் வெடுக்குநாறி மலை ஆதி சிவனின் தமிழ்ச்சைவக் குடிகளிற்கு தலைமைப் பூசகர் மற்றும் பரிபாலன சபைக்கு முழுமையான ஆதரவை நாங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றோம்வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் மகா சிவராத்திரி பூசை
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
இங்கிலாந்து, குவைத் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!
-
யாழ்ப்பாணம் மாதகல் கடல் பகுதியில் மர்மமான முறையில் மிதந்து வந்த 116 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது!
-
பொழிந்த கடும் மழையின்போது காங்கேசன்துறை கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை கோபுரம் சாய்ந்துள்ளது!
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
10 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
10 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
10 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
10 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
10 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
10 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago