Skip to main content

யாழ்ப்பாணம் மாதகல் கடல் பகுதியில் மர்மமான முறையில் மிதந்து வந்த 116 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது!

Oct 12, 2020 240 views Posted By : YarlSri TV
Image

யாழ்ப்பாணம் மாதகல் கடல் பகுதியில் மர்மமான முறையில் மிதந்து வந்த 116 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது! 

யாழ்ப்பாணம் மாதகல் கடல் பகுதியில் மர்மமான முறையில் மிதந்து வந்த 116 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.



இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,



யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படையினர் இன்று அதிகாலை கடலில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.இதன்போது மாதகல் கடல் பகுதியில் மர்ம பொதிகள் மிதந்து வருவதை அவதானித்துள்ளனர்.



அவ்வாறு மிதந்து வந்த மர்ம பொருட்களை கடற்படையினர் சோதனையிட்டபோது அதில் இருந்து கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கேரள கஞ்சாவினை கடற் படையினர் மீட்டு காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.



இவ்வாறு மீட்கப்பட்ட பொதிகள் 116 கிலோ எடையுடைய கேரள கஞ்சா என்று காங்கேசன் துறை போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை