கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்த 128 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்!
Nov 15, 2020 268 views Posted By : YarlSri TV
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்த 128 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்த 128 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்களும், இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரங்களில் பணிபுரியும் அதிகாரிகளுமே இவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இதற்கமைய, நேற்று மாலை 6.35 அளவில், சீனாவின் ஷங்காய் விமான நிலையத்தில் இருந்து வருகை தந்த விமானத்தின் ஊடாக, ஐந்து இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதனையடுத்து, நேற்றிரவு 11.30 அளவில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் டுபாய் நகரிலிருந்து வருகை தந்த எமிரேட்ஸ் விமான சேவையின் ஊடாக, 59 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதேவேளை, கட்டாரில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 39 பேர் இன்று அதிகாலை 1.45 அளவில் நாட்டை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்வாறு ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்தோர், இலங்கையில் உள்ள தூதரகங்களில் பணிபுரிவோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொழில் நிமிர்த்தம் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சென்றிருந்த 25 இலங்கையர்கள் இன்றைய தினம் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதற்கமைய, அவர்கள் ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றின் ஊடாக, இன்று அதிகாலை 4.30 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இந்த நிலையில், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
கொரோனா தொற்றால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்!
-
பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஐரோப்பிய ஓன்றியத்திடம் இலங்கை தெரிவிப்பு
-
ஐந்து கடலாமைகளுடன் கொழும்புத்துறையில் விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago