பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஐரோப்பிய ஓன்றியத்திடம் இலங்கை தெரிவிப்பு
Jan 26, 2021 238 views Posted By : YarlSri TV
பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஐரோப்பிய ஓன்றியத்திடம் இலங்கை தெரிவிப்பு
பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்துள்ளது.
இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் கூட்டு ஆணைக்குழுவின் இருபத்தி மூன்றாவது சந்திப்பை நேற்று காணொளி காட்சி வாயிலாக நடத்தின.
இந்த சந்திப்பின்போதே இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் அதனை சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ற வகையில் மாற்றவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தில் உரிய மாற்றங்களை மேற்கொள்வதற்காக பயங்கரவாத தடைச்சட்டம் குறித்த ஏற்பாடுகளை மீளாய்விற்கு உட்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் இதன்போது, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை மக்களுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்த விருப்பம் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு, சுகாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளை இலக்காகக் கொண்ட கொவிட் 19 தொற்றுநோயைக் கையாள்வதற்காக இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் டொலர் மானியம் வழங்கியதற்கு இலங்கை இதன்போது நன்றி தெரிவித்தது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago