Skip to main content

உங்க அக்கவுண்டுக்கு ரூ.2,000 வந்திருச்சா

Nov 09, 2020 263 views Posted By : YarlSri TV
Image

உங்க அக்கவுண்டுக்கு ரூ.2,000 வந்திருச்சா 

ஏழாவது தவணைப் பணம் இந்த மாதம் அனைவருக்கும் டெபாசிட் செய்யப்படுகிறது.






மத்திய அரசின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் அடுத்த கட்ட தவணைப் பணம் ரூ.2000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. அது கிடைக்கவேண்டுமானால் நீங்கள் கண்டிப்பாக இதைச் செய்திருக்க வேண்டும். முழு விவரம் இதோ...




விவசாய நிதியுதவித் திட்டம்!



பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தீன் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, 2018ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. 2019-20 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை ரூ.2,000 என ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் விவசாயிகளுக்கு விரைந்து பணம் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டு அதன்படி வழங்கப்பட்டு வருகிறது.





யாருக்கெல்லாம் பணம் கிடைக்கும்?



இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் விண்ணப்பிக்கலாம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதேநேரம், நிறுவன விவசாயிகள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் மாதத்திற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்றோர் இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்க முடியாது.





ஆறாவது தவணைப் பணம்!



விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆறாவது தவணைப் பணம் அரசு தரப்பிலிருந்து டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இதுவரையில் மொத்தம் 11 கோடி விவசாயிகளுக்கு ரூ.95,000 கோடிப் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆறாவது தவணைக்கான பணம் ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் வழங்கப்படுகிறது. பலருக்கு இந்தப் பணம் வந்துவிட்டதா இல்லையா என்ற சந்தேகம் உள்ளது. அதை தெரிந்துகொள்வதற்கு பிஎம் கிசான் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/ என்பதில் சென்று பார்க்கலாம். இந்த முகவரியை ஓப்பன் செய்தால் அதில் ’Farmers Corner’ என்ற வசதி இருக்கும். அதை கிளிக் செய்யவும். beneficiary status அல்லது beneficiary list என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இதை ஓப்பன் செய்தவுடன் புதிய திரை ஒன்று வரும். அதில் ஆதார் எண், மொபைல் எண் போன்ற விவரங்கள் வரும். அதைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் உங்களுக்குத் தேவையான தகவல் அதில் கிடைக்கும்.





ஏழாவது தவணைப் பணம்!



விவசாய நிதியுதவித் திட்டத்தின் ஏழாவது தவணைப் பணம் நவம்பர் மாத இறுதியிலும் டிசம்பர் மாதத்திலும் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஏழாவது தவணைப் பணத்தை நீங்கள் பெறுவதற்கு முன் ஆறாவது தவணைக்கான 2,000 ரூபாய் நீங்கள் இன்னும் பெறவில்லை என்றால், அதில் என்ன தவறு நடந்தது என்று கண்டுபிடித்து அதைச் சரிசெய்ய வேண்டும். இல்லாவிட்டால் இந்த ஏழாவது தவணைப் பணமும் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. இன்னும் சில நாட்கள்மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் லட்சக்கணக்கானோருக்கு ஆறாவது தவணைப் பணமே இன்னும் வந்துசேரவில்லை. நீங்கள் ஆறாவது தவணைத் தொகையைப் பெறவில்லை என்றால் விரைவில் விண்ணப்பப் படிவத்தில் உள்ள தவறுகளைச் சரிசெய்ய வேண்டும்.





விண்ணப்பிப்பது எப்படி?



மத்திய அரசின் இந்தத் திட்டத்தில் நிறைய விவசாயிகள் இன்னும் இணையாமல் இருக்கின்றனர். கொரோனா ஊரடங்கு பிரச்சினையால் சிலரால் இணைய முடியாமல் போனது. இப்போது அவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. பிஎம் கிசான் நிதியுதவியைப் பெற விரும்பும் விவசாயிகள் முதலில் மாநில அரசு அல்லது உள்ளூர் வருவாய் அதிகாரி பரிந்துரைத்த நோடல் அதிகாரியை அணுக வேண்டும். பொதுச் சேவை மையங்களில் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளை பதிவு செய்து பயன்பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளைப் பதிவு செய்வதற்கான முழுப் பொறுப்பும் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் உள்ளது. பி.எம் கிசான் தளத்திலும் விவசாயிகள் நேரடியாக இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.





என்னென்ன ஆவணங்கள் தேவை?



இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, குடியுரிமை சான்றிதழ், நில உரிமையாளரின் ஆவணங்கள் மற்றும் ஜன தன் வங்கி கணக்கு விவரங்கள் தேவைப்படும். ஆன்லைன் விண்ணப்பத்தின் போது, பிரதமர் கிசான் வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ போர்ட்டலில் ’farmers corner’ என்ற ஒரு பிரிவு உள்ளது . இந்த போர்டல் மூலம் விவசாயிகள் தங்களை பதிவு செய்ய வேண்டும். அவர்கள் தங்களது பெயரைத் திருத்தம் செய்ய இந்த போர்ட்டலையும் பயன்படுத்தலாம். நிதியுதவியின் தற்போதைய நிலை குறித்த தகவல்களையும் இந்தப் பக்கத்தில் விவசாயிகள் தெரிந்துகொள்ளலாம்.







Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை