கல்லூரியில் இருந்து வெளிவரும் கழிவு நீரால் ஶ்ரீநகர் கிராமத்தில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்!
Nov 03, 2020 280 views Posted By : YarlSri TV
கல்லூரியில் இருந்து வெளிவரும் கழிவு நீரால் ஶ்ரீநகர் கிராமத்தில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்!
தனிமைப்படுத்தல் மையமாக செயற்பட்டுவரும் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் இருந்து வெளிவரும் கழிவு நீரால் ஶ்ரீநகர் கிராமத்தில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே அதற்கான மாற்று ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு வவுனியா தெற்கு தமிழ்பிரதேச சபை உறுப்பினர் த.சுஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தேசிய கல்வியற் கல்லூரியானது கொரோனா தனிமைப்படுத்தல் மையமாக செயற்பட்டுவருகின்றது. அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டும் வருகின்றது.
இந்நிலையில் அங்கிருந்து வெளியேறும் கழிவு நீர் கல்வியற் கல்லூரியின் பின்பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீநகர் கிராமமூடாக வெளியேறி வவுனியா குளத்தில் கலக்கின்றது. இதனால் குறித்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் மத்தியில் அச்சமான ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் கழிவு நீரானது சீரான முறையில் வெளியேறாமல் வீதியின் கரையில் தேங்கி நிற்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான வாய்ப்புக்களும் அதிகரித்து காணப்படுகின்றது.
எனவே சுகாதார அதிகாரிகள் இந்தவிடயத்தில் கவனம் எடுத்து கழிவு நீரை கிராமமூடாக வெளியேற்றுவதில் பாதுகாப்பான முறையில் மாற்று ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு தெரிவித்ததுடன், இவ்விடயம் தொடர்பாக குறித்த பகுதிக்கு பொறுப்பான சுகாதார பரிசோதகரிற்கும் தெரியப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
20 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
20 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
20 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
20 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
20 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
20 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago