கோவையில் திருநங்கை சங்கீதாவை கொலை செய்த வழக்கில் இளைஞர் ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்!
Oct 23, 2020 260 views Posted By : YarlSri TV
கோவையில் திருநங்கை சங்கீதாவை கொலை செய்த வழக்கில் இளைஞர் ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்!
கோவை சாய்பாபா காலனியில் வசித்து வந்தவர் திருநங்கை சங்கீதா.இவர் திருநங்கைகள் நல்வாழ்விற்காக தொடர்ந்து பணியாற்றி வந்த நிலையில் கடந்த மாதம் டிரான்ஸ் கிச்சன் என்ற பெயரில் உணவகத்தை தொடங்கினார். இதையடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சங்கீதா உடலில் வெட்டு காயங்களுடன் தண்ணீர் ட்ரம்மில் அடைக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய சாய்பாபா காலனி போலீசார் அவரது கொலை குறித்து விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில் திருநங்கை சங்கீதாவை கொலை செய்த வழக்கில் ராஜேஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சங்கீதாவின் டிரான்ஸ் கிச்சனில் பிரியாணி மாஸ்டராக வேலைபார்த்து வந்துள்ளார். திருநங்கை சங்கீதாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதை அவர் போலீசில் கூற முயன்றதால் அவரை கொன்றதாகவும் ராஜேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். இதை தொடர்ந்து ராஜேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1485 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1485 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1485 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1485 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1485 Days ago