தலைநகர் மொகாதிசுவில் அல்சபாப் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் நிலை குலைந்துபோன சோமாலியா படைவீரர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர்!
Oct 16, 2020 236 views Posted By : YarlSri TV
தலைநகர் மொகாதிசுவில் அல்சபாப் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் நிலை குலைந்துபோன சோமாலியா படைவீரர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர்!
சோமாலியா நாட்டில் அல் சபாப் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அங்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை அகற்றிவிட்டு மத அடிப்படையிலான அரசை அமைப்பதற்காக இவர்கள் 2008-ம் ஆண்டு முதல் ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள்.
இவர்கள் ராணுவம் மீது அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி பெருத்த உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் தலைநகர் மொகாதிசுவின் வடமேற்கில் உள்ள அப்கோய் மாவட்டத்துக்கு அருகே காட்டிலும், பண்ணைகளிலும் அல்சபாப் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் கடும் தாக்குதல்களை நடத்தினர்.
இந்த தாக்குதல்களில் நிலை குலைந்துபோன சோமாலியா படைவீரர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர்.
எதிர் தாக்குதலில் அல் சபாப் பயங்கரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ராணுவ உயர் அதிகாரி மேஜர் முகமது அலி தெரிவித்தார்.
இதற்கிடையே அல் சபாப் பயங்கரவாதிகள் அமைப்பின் செய்தி தொடர்பாளர் அப்தியாசிஸ் அபு முசாப் கூறுகையில், “நாங்கள் 24 படைவீரர்களை கொன்று விட்டோம். மற்றவர்கள் ஓட்டம் பிடித்து விட்டனர்” என குறிப்பிட்டார்.
சோமாலியாவில் தாக்குதல்கள் நடைபெறுகிறபோது உயிரிழப்புகளைப் பொறுத்தமட்டில் சோமாலியா அரசும், பயங்கரவாதிகளும் மாறுபட்ட புள்ளி விவரங்களை கூறுவது வழக்கமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
12 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
12 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
12 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
12 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
12 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
12 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago