இந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணை அறிவிப்பு!
Sep 21, 2021 161 views Posted By : YarlSri TV
இந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணை அறிவிப்பு!
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு (2022) ஜூன் மாதம் வரை உள்ளூரில் விளையாடும் போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.
அதாவது, இந்திய அணி அடுத்த 9 மாத காலத்தில் சொந்த மண்ணில் 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 14 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
இதன்படி நியூசிலாந்து அணி நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 2 டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது.
இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஜெய்ப்பூரில் நவம்பர் 17-ம் தேதியும், 2-வது 20 ஓவர் போட்டி ராஞ்சியில் 19-ம் தேதியும், 3-வது 20 ஓவர் போட்டி கொல்கத்தாவில் 21-ம் தேதியும் நடக்கிறது. முதலாவது டெஸ்ட் கான்பூரில் நவம்பர் 25-ம் தேதியும், 2-வது டெஸ்ட் மும்பையில் டிசம்பர் 3-ம் தேதியும் தொடங்குகிறது.
அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி பிப்ரவரி மாதத்தில் வந்து 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் போட்டியில் கலந்து கொள்கிறது. முதலாவது ஒருநாள் போட்டி ஆமதாபாத்திலும் (பிப்.6), 2-வது போட்டி ஜெய்ப்பூரிலும் (பிப்.9), 3-வது போட்டி கொல்கத்தாவிலும் (பிப்.12), முதலாவது 20 ஓவர் போட்டி கட்டாக்கிலும் (பிப்.15), 2-வது போட்டி விசாகப்பட்டினத்திலும் (பிப்.18), 3-வது போட்டி திருவனந்தபுரத்திலும் (பிப்.20) நடக்கிறது.
இதையடுத்து, இலங்கை அணி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் பெங்களூருவில் பிப்ரவரி 25-ம் தேதியும், 2-வது டெஸ்ட் மொகாலியில் மார்ச் 5-ம் தேதியும் தொடங்குகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி மொகாலியிலும் (மார்ச் 13), 2-வது போட்டி தர்மசாலாவிலும் (மார்ச் 15), 3-வது போட்டி லக்னோவிலும் (மார்ச் 18) நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து தென்ஆப்பிரிக்க அணி ஜூன் மாதத்தில் ஐந்து 20 ஓவர் போட்டியில் ஆடுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி சென்னையிலும் (ஜூன் 9), 2-வது போட்டி பெங்களூருவிலும் (ஜூன் 12), 3-வது போட்டி நாக்பூரிலும் (ஜூன் 14), 4-வது போட்டி ராஜ்கோட்டிலும் (ஜூன் 17), 5-வது மற்றும் கடைசி போட்டி டெல்லியிலும் (ஜூன் 19) நடக்கிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1490 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1490 Days ago