ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சீனா, பாகிஸ்தான் போன்ற சர்வாதிகார நாடுகளை தேர்ந்து எடுத்ததாக அமெரிக்கா கண்டனம் தெர்வித்து உள்ளது!
Oct 14, 2020 212 views Posted By : YarlSri TV
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சீனா, பாகிஸ்தான் போன்ற சர்வாதிகார நாடுகளை தேர்ந்து எடுத்ததாக அமெரிக்கா கண்டனம் தெர்வித்து உள்ளது!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டன, சீனா மிகச்சிறிய வித்தியாசத்தில் ஒரு இடத்தை வென்றது. இந்த தேர்தலில் சவுதி அரேபியா தோற்கடிக்கப்பட்டது.
பொதுச் சபையில் செவ்வாய்க்கிழமை நடத்த ஓட்டெடுப்பில் சீனாவுக்கு 139 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. 2016 இல் கிடைத்த 180 உடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஐ.நா. இயக்குனர் லூயிஸ் சார்போனியோ டுவீட் செய்துள்ளார்.
உய்குர் முஸ்லீம் சிறுபான்மையினர் மற்றும் பல நாடுகள் மற்றும் மனித உரிமைகள் குழுக்களின் எதிர்ப்பையும் மீறி சீனா ஒரு வெற்றியைப் பெற முடிந்தது.
2016 ல் இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்ட ரஷியா, இந்த முறை 158 வாக்குகளைப் பெற்று மீண்டும் வந்தது.
சவூதி அரேபியா மனித உரிமை மீறல்களுக்காக விமர்சிக்கப்பட்டாலும், அதன் தோல்வி ஆச்சரியமாக இருந்தது, ஏனெனில் இது கடைசியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது 2016 ல் 152 வாக்குகளைப் பெற்று இருந்தது.
ஜெர்மனி தலைமையிலான 39 நாடுகளின் குழு கடந்த வாரம் ஐ.நாவில் சீனாவை கடுமையாக விமர்சித்தது, சின்ஜியாங்கில் மனித உரிமை நிலைமை மற்றும் ஹாங்காங்கில் சமீபத்திய பிரச்சினைகள் குறித்து அவர்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக கூறியுள்ளனர்.
இதற்கிடையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சீனா, ரஷியா மற்றும் கியூபா போன்ற சர்வாதிகார ஆட்சிகள் நடைபெறும் நாடுகளை தேர்ந்தெடுத்ததற்காக ஐக்கிய நாடுகள் சபையை அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக்கேல் பாம்பியோ விமர்சனம் செய்து உள்ளார்.
மேலும், ஐநா பாதுகாப்பு சபையில் இருந்து விலகுவதற்கு அமெரிக்கா எடுத்த முடிவு சரிதான் என இந்த நிகழ்வு உறுதிப்படுத்தியிருப்பதாகவும் பாம்பியோ குறிப்பிட்டுள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
1 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
1 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
1 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
1 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
1 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago