சுரங்கத்தில் சிக்கிய 12 தொழிலாளர்கள் 7 நாட்கள் ஆகியும் உயிருடன் இருக்கும் அதிசயம்!
Jan 19, 2021 264 views Posted By : YarlSri TV
சுரங்கத்தில் சிக்கிய 12 தொழிலாளர்கள் 7 நாட்கள் ஆகியும் உயிருடன் இருக்கும் அதிசயம்!
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாண்டோங் மாகாணத்தில் யான்டாய் நகரில் தங்கச் சுரங்கம் ஒன்று உள்ளது. இங்கு கடந்த 10-ந்தேதி தொழிலாளர்கள் வழக்கம்போல் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது சுரங்கத்தில் பயங்கர வெடிப்பு நேரிட்டது.
இதில் சுரங்கத்தின் நுழை வாயில் பகுதி இடிந்து இதனால் சுரங்கத்துக்குள் இருந்த தொழிலாளர்கள் 22 பேர் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். எனினும் சுரங்க நிர்வாகம் விபத்து நடந்த 30 மணி நேரத்துக்குப் பிறகு போலீஸ் மற்றும் மீட்புக் குழுவுக்கு தகவல் தெரிவித்தது.
மீட்பு பணிகள் தாமதமாக தொடங்கியதால் மீட்புக்குழுவினர் சுரங்கத்துக்குள் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை நெருங்குவதில் சிக்கல் எழுந்தது. இதனால் 6 நாட்கள் ஆகியும் தொழிலாளர்களின் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் விபத்து நடந்த 7 நாட்களுக்குப் பிறகு சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் 12 பேர் உயிருடன் இருப்பது நேற்று தெரியவந்தது. சுரங்கத்தில் உள்ள ஒரு சிறிய துளை வழியாக தொழிலாளர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதை மீட்பு குழுவுக்கு தெரியப்படுத்தினர்.
இது மீட்புக் குழுவிற்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. இதையடுத்து நூற்றுக்கணக்கான மீட்புக்குழுவினர், தொழிலாளர்கள் 12 பேரையும் பத்திரமாக மீட்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதேசமயம் மற்ற தொழிலாளர்கள் 10 பேரின் கதி என்ன என்பது இன்னமும் தெரியவில்லை.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1471 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1471 Days ago