பா.ஜ.க என்னைப் பாதுகாக்கவில்லை என்று அர்த்தம் - எம்.பி சுப்ரமணிய சுவாமி!
Sep 09, 2020 289 views Posted By : YarlSri TV
பா.ஜ.க என்னைப் பாதுகாக்கவில்லை என்று அர்த்தம் - எம்.பி சுப்ரமணிய சுவாமி!
பா.ஜ.கவின் ராஜ்யசபா எம்.பியாக இருப்பவர் சுப்ரமணிய சுவாமி. பா.ஜ.க எம்.பியாக இருந்தாலும், பா.ஜ.கவின் ஆட்சி குறித்து பொதுவெளியில் கடுமையாக விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் சுப்ரமணியசுவாமி.
குறிப்பாக, பொருளாதார மந்தநிலை குறித்த விவகாரத்தில் கடந்த ஆட்சியில் நிதியமைச்சராக அருண் ஜெட்லியையும் தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். இந்தநிலையில், நேற்று பா.ஜ.க ஐ.டி அணியை விமர்சித்து ட்விட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதில், ‘பா.ஜ.க ஐ.டி பிரிவு மோசமாக நடந்துகொண்டுவருகிறது. போலியான ஐ.டிக்களை வைத்துகொண்டு எனக்கு எதிராக தனிப்பட்ட தாக்குதலை நடத்துகிறது. என்னைப் பின்பற்றுபவர்கள் கடுமையாக எதிர்வினை செய்தால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது’ என்று குறிப்பிட்டிருந்தார். இதுசர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்தநிலையில், இன்றைய ட்விட்டர் பதிவில், ‘பா.ஜ.க ஐ.டி பிரிவு தலைவர் அமித் மாளவியாவை நாளைக்கு அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கவில்லையென்றால் பா.ஜ.க என்னைப் பாதுகாக்கவில்லை என்று அர்த்தம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago