எஸ்.பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்!
Sep 25, 2020 246 views Posted By : YarlSri TV
எஸ்.பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்!
மக்கள் மனதில் தனது பாடல் வசத்தால் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அண்மையில் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக வெளியான செய்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவருக்காக கூட்டு பிரார்த்தனை நடத்தப்பட்டது. அவர் மீண்டு வர வேண்டும் என பிரபலங்களும் பொதுமக்களும் இசை பிரியர்களும் பிரார்த்தித்து வந்தனர்.
இந்த நிலையில் தீவிர நிமோனியா மற்றும் இதய – சுவாச மண்டல செயலிழப்பால் பாடகர் எஸ்.பிபி இன்று பிற்பகல் காலமானார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி எஸ்.பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “திரு.எஸ்பிபி அவர்களின் மறைவால் நமது கலாச்சார உலத்துக்கு பேரிழப்பு. நாடு முழுவதும் எல்லா வீட்டிலும் ஒலிக்கும் அவரது இனிமையான குரல் மற்றும் இசை பல சகாப்தங்களாக பார்வையாளர்களை கவர்ந்தது. இந்த நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். ஓம் சாந்தி.” என குறிப்பிட்டுள்ளார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
ஸ்பெயினில் கொவிட்-19 தொற்றினால் 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
-
இளைஞர்கள் நடத்திய நூதன போராட்டம்- அதிர்ந்த அதிகாரிகள்!
-
இந்தியா இலங்கை கடன் தொடர்பில் இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்!.இந்தியா, இலங்கைக்கு வழங்க உள்ள பெருந்தொகை கடன் தொடர்பான செய்திகளை இந்தியாவின் ஆங்கில ஊடகமான NDTV நேற்று வெளியிட்டுள்ளது. இந்த ஊடகத்தின் செய்திக்கு அமைய இலங்கை பணம் இல்லாத நாடு என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. நிதியின்மை காரணமாக இலங்கையால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய தேவையான டீசலை கொள்வனவு செய்ய முடியவில்லை. மின்சாரத்தை உற்பதி செய்ய முடியாத காரணத்தினால், இலங்கை மக்கள் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையின் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலைமையில் இருந்து மீள இந்திய அரசு 500 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர கடனுதவியை இலங்கைக்கு வழங்குகிறது. இந்த அவசர கடனை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய விசேட நிபந்தனை குறித்தும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா வழங்கும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி, இந்திய எரிபொருள் விநியோகஸ்தர்களிடமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. இந்தியா வழங்கும் பணத்தில் இந்தியாவிடமே எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தம். இதன் மூலம் இந்தியா வழங்கிய கடன் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பிச் செல்லும். அதேவேளை இந்த நிவாரணக் கடனை தவிர இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்த மேலும் 915 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இந்தியா இணங்கியுள்ளது என NDTVயின் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இது சம்பந்தமான பேச்சுவார்த்தை கடந்த இரண்டு வாரங்களில் நடந்துள்ளது. இதனை தவிர மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்குவது சம்பந்தமாக ராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இலங்கைக்கு தற்போது மிக முக்கியமாக தேவைப்படும் உணவு மற்றும் மருந்துகளை கொள்வனவு செய்ய இந்த கடன் பெறப்படவுள்ளது. இந்தியா வழங்கும் இந்த ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி, இந்தியாவிடம் இருந்தே உணவு மற்றும் மருந்தை கொள்வனவு செய்ய வேண்டும் என இந்தியா நிபந்தனை விதித்துள்ளதாக NDTVயின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago