28ஆம் தேதி காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்!
Sep 22, 2020 263 views Posted By : YarlSri TV
28ஆம் தேதி காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்!
அரியலூர் அருகே ‘ஹிந்தி தெரியாதா? அப்ப லோன் இல்லை’ என ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவரை இந்தியன் ஓவர்சிஸ் வங்கி திருப்பிய அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வங்கி மேலாளர் மீது மான நஷ்ட ஈடு கேட்டு ஓய்வுபெற்ற மருத்துவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
வேளாண்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் மக்களவையில் நிறைவேறிய 3 மசோதாக்களுக்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் எதிர்ப்பை மீறி இந்த மசோதாக்கள், மாநிலங்களவை மற்றும் மக்களவையில் நிறைவேறின.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்கள் குறித்து நேற்று தோழமை கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய ஸ்டாலின் மாவட்ட, ஒன்றிய தலைநகரங்களில் வரும் 28 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்தார்.
இந்நிலையில் திமுக தோழமை கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ள இடங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். சென்னை மேற்கில் கி வீரமணி, சென்னை வடக்கில் கே. எஸ்.அழகிரி, சென்னை தெற்கில் வைகோ ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். சென்னை கிழக்கில் பாலகிருஷ்ணன், தஞ்சையில் முத்தரசன், திருச்சியில் காதர் மொய்தீன் ஆகியோர் பங்கேற்கின்றனர். கடலூர்- திருமாவளவன், தாம்பரம் -ஜவாஹிருல்லா, கோவை- ஈஸ்வரன், பெரம்பலூரில் ரவி பச்சமுத்து ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago