பேரூந்துகளை மறித்து சுகாதார பரிசோதகர்கள் சோதனை!
May 04, 2021 158 views Posted By : YarlSri TV
பேரூந்துகளை மறித்து சுகாதார பரிசோதகர்கள் சோதனை!
கொரோனா தொற்று தீவிரம் பெற்றதையடுத்து வவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் போக்குவரத்து வாகனங்களை வழிமறித்து விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா தாக்கம் வவுனியா மாவட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதுடன், இன்று (04.05) காலை 6.30 மணி முதல் விசேட சோதனை நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.
இதன்போது வவுனியா – மன்னார் வீதியின் பட்டானிச்சூர், குருமன்காடு ஆகிய பகுதிகளில் வீதிகளுடாக பயணித்த பயணிகள் பேரூந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்கள் என்பவற்றை வழிமறித்து சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடத்தினர்.
இதன்போது சமூக இடைவெளிகளைப் பேணாது அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்துகளுக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்ததுடன், முச்சக்கர வண்டிகளில் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராகவும் முறைப்பாடுகளை பதிவு செய்தனர்.
அத்துடன் மோட்டர் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகள் என்பவற்றில் பயணிக்கும் போது முககவசம் அணியாது சென்றவர்களையும் வழிமறித்த சுகாதார பரிசோதர்கள் அவர்களுக்கு எதிராகவும் முறைப்பாட்டை பதிவு செய்தனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1441 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1441 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1441 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1442 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1442 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1442 Days ago