மாகாணங்களில் நுண்கடன் திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம்!
Aug 17, 2020 289 views Posted By : YarlSri TV
மாகாணங்களில் நுண்கடன் திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம்!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நுண்கடன் திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு
நிவாரணம் வழங்கப்படும் என சமுர்த்தி, நுண்நிதி மற்றும் சுயத்தொழில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அப்பகுதி மக்கள் பொருளாதார ரீதியில் சுயமான முன்னேற்றமடைவதற்கு சுய கைத்தொழில் முறைமைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கில் நுண்கடன் திட்டங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை தொடர்பாக வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடந்த அரசாங்கத்தின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவில்லை என்பதனாலேயே தமிழ்-முஸ்லிம் மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு இம்முறை ஆதரவு வழங்கி தமிழ் அரசியல் கட்சிகளை புறக்கணித்துள்ளார்கள் என ஷெஹான் சேமசிங்க கூறினார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் நுண்கடன் திட்டம் பெரிதும் பாதிப்பினை ஏற்டுத்தியுள்ளது என குறிப்பிட்ட அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தில் இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது என கூறினார்.
நுண்கடன் திட்டங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய வங்கி ஊடாக நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அத்தோடு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் பொருளாதார ரீதியில் சுயமாக முன்னேற்றுவதற்கான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் சுயகைத்தொழில் துறையை அவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
16 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
16 Hours agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
16 Hours agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1475 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1475 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago