இந்தியாவில் 82.63 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது!
Feb 14, 2021 180 views Posted By : YarlSri TV
இந்தியாவில் 82.63 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது!
இந்தியாவில் 82.63 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
உலக நாடுகளையே உலுக்கி எடுத்த கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதிலும் 3000 மையங்களில் முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா வைரஸ் தடுப்பூசி மீதான நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் குறைந்திருந்ததால் ஆரம்பக்கட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டினர். ஆனால், தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
கடந்த மாதம் 16ம் தேதி தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் போடும் பணி நேற்று தொடங்கியது. இம்மாத இறுதிக்குள் முன்களப்பணியாளர்களுக்கு போடும் பணி முடிவடைந்து, மக்களுக்கு செலுத்தும் பணி தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 12,194 பேருக்கு கொரோனா உறுதியானதாகவும் 11,106 டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை 82,63,858 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும், ஒரே நாளில் 92 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மொத்த உயிரிழப்புகள் 1,55,642 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago