Skip to main content

கொரோனாவுக்கு கட்டம் கட்டிய எடப்பாடி பழனிச்சாமி..!! 30 லட்சம் இல்லங்களுக்கு விழிப்புணர்வு பிளான்!

Aug 14, 2020 264 views Posted By : YarlSri TV
Image

கொரோனாவுக்கு கட்டம் கட்டிய எடப்பாடி பழனிச்சாமி..!! 30 லட்சம் இல்லங்களுக்கு விழிப்புணர்வு பிளான்! 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள் இன்று (14.8.2020) தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 30 சிறிய அதிநவீன எல்.இ.டி. வீடியோ வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.



மேலும், சென்னை பெருநகரில் 10 லட்சம் இல்லங்களுக்கு மூன்று கட்டங்களாக 30 லட்சம் இல்லங்களுக்கு கொரோனா, டெங்கு மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கும் பணி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பிய 1 லட்சம் நபர்களுக்கு கைப்பேசி மூலம் முதலமைச்சர் அவர்கள் வாழ்த்து தெரிவித்தல், நேப்பியர் பாலம் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மேம்பாலம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள மாறும் வண்ண விளக்குகள் ஆகியவற்றை துவக்கி வைத்தார்கள். 



பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் 38,198 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.



தொற்று உள்ளவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக நாளொன்றிற்கு 500 முதல் 550 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் வைரஸ் தொற்று அதிகம் கண்டறியப்பட்ட இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 31,702 சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 17,86,970 நபர்கள் பயனடைந்துள்ளனர்.



வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளை கைப்பேசியின் மூலமாக கண்காணிக்கும் திட்டம் மாநகராட்சியின் சார்பில்செயல்படுத்த ப்பட்டு வருகிறது.



சென்னை சமூக களப்பணித் திட்டம் (Chennai Community Intervention Program) என்ற சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.



அதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், கொரோனா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மண்டலத்திற்கு 2 வாகனங்கள் வீதம், 15 மண்டலங்களுக்கு, மொத்தம் 30 சிறிய அதிநவீன எல்.இ.டி. வீடியோ வாகனங்களின் சேவைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். 



இவ்வாகனங்களில், கொரோனா வைரஸ் தொற்று குறித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் விழிப்புணர்வு உரை, சுகாதாரத் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் கொரோனா விழிப்புணர்வு குறும்படங்கள் போன்றவை ஒளிபரப்பப்படும்.



பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தவும், கொரோனா தொற்று பரிசோதனைகளை அதிகரிக்கவும், கொரோனா தொற்று அறிகுறிகளான காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்றவை குறித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள.



12,000 களப்பணியாளர்கள் மூலம், பெருநகர சென்னை மாநகராட்சியில் 10 லட்சம் இல்லங்களில் வழங்கவுள்ள 10 லட்சம் கொரோனா வைரஸ் தொற்று விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், பருவமழை துவங்கியுள்ள நிலையில் 10 லட்சம் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் பொழிகின்ற மழைநீரை வீணாக்காமல் சேகரிக்க பயன்படும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளின் அவசியம் குறித்த 10 இலட்சம் விழிப்புணர்வு துண்டு  பிரசுரங்கள்.



 ஆகியவற்றை வழங்கும் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று களப் பணியாளர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்கள். 



பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பிய 1 லட்சம் நபர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் கைப்பேசி எண்கள் மூலமாக தனது வாழ்த்துகளை தெரிவித்தார்கள். 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை