Skip to main content

அடைக்கல மாதா தேவாலயத்தின் திருசொரூபம் இனந்தெரியாத நபர் ஒருவரினால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

Jun 03, 2020 288 views Posted By : YarlSri TV
Image

அடைக்கல மாதா தேவாலயத்தின் திருசொரூபம் இனந்தெரியாத நபர் ஒருவரினால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அடைக்கல மாதா தேவாலயத்தின் திருசொரூபம் இனந்தெரியாத நபர் ஒருவரினால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.



 



கோவிலின் மூலையில் அமைக்கப்பட்டிருந்த குறித்த சொரூபம் மக்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தது இந்நிலையில் இன்று காலை புலம்பெயர் நாட்டில் இருந்து வருகை தந்திருக்கும் ஒருவர் என கூறப்படுவதால் கண்ணாடிகள் சிலையின் கைப்பகுதி என்பன அடித்து உடைக்கப்பட்டுள்ளது.



 



குறித்த நபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



 



தற்போது மாதாவின் சொரூபம் பாதுகாப்பு நலன் கருதி அடைக்கல மாதா ஆலயத்தின் உட்பகுதிக்குள் கொண்டுசென்று வைக்கப்பட்டுள்ளது.



 



குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் உள்ள சில தேவாலயங்களில் சிலைகளை உடைத்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை